திருமதி. பராசக்கதி நடேசபிள்ளை

பராசக்கதி நடேசபிள்ளை

மறைவு: 26 ஏப்ரல் 2024

யாழ். நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பராசக்தி நடேசபிள்ளை அவர்கள் 26-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா - ரூபவதி தம்பதியினரின் பாசமிகு மகளும்,
 
காலஞ்சென்ற முருகேசு - கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

நடேசபிள்ளை (கோண்டாவில்) அவர்களின் அன்பு மனைவியும்,

உதயகுமாரன் (கோபுரம் சில்க்ஸ்), சசிக்குமார் (பிரான்ஸ்), கஜேந்திரகுமார் (The Halo Trust Sri Lanka, முன்னாள் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அஜந்தா (கோபுரம் சில்க்ஸ்), நிஷாந்தி (பிரான்ஸ்), சுதா (சட்டத்தரணி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விக்னேஸ்வரன், கோமளாதேவி, பவானந்தவதி, இரத்தினசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கனகேஸ்வரி, கந்தையா, இராசரத்தினம், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், தங்கலட்சுமி, மலர்மணி, தாமோதரம்பிள்ளை, தவராசா, சின்னராஜா, பரமானந்தம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

கஜனிகா, சௌமிகா, அஜய், சோபியா, சாரணி, சயானா, மதுஷன், அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

திருமாறன், தனுஷியா, உதயன், அனுஷியா, கஜீவன், நிரோஷிகா, காலஞ்சென்ற தர்ஷியா மற்றும் துஷாந், அஜித்தா, தரணியா, கேதீஸ்வரன், கவிதா, திருக்குமார், மதிவதனி, விஜிதரன், கல்பனா, வடிவாசன் குகாநந்தி, கோபிநாத், கஜானி, சதானி ஆகியோரின் பாசமிகு அத்தை, பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று விநாயகர் வீதி, நல்லூா் வடக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் புகழ் உடல் தகனக்கிரியைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/04/2024 00:00)