திருமதி. தேவகி ஆலாலசுந்தரம்

தேவகி ஆலாலசுந்தரம்

தோற்றம்: 05 ஜூன் 1953 - மறைவு: 22 ஏப்ரல் 2024

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தேவகி ஆலாலசுந்தரம் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
 
ஆலாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
செல்வினி, செந்தூரன் மற்றும் பிரியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
யோகராஜ், பிரவீணா, கார்த்திக் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
மதுஷன், தனுஷன், ஆரன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
 
காலஞ்சென்றவர்களான யோகநாதன், கதிர்காமநாதன் மற்றும் புனிதவதி, கமலநாதன்  ஆகியோரின் அன்பு சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், கமலாதேவி மற்றும் விமலாதேவி, சண்முகசுந்தரம், சந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழ் உடல் மட்டுவில் வடக்கு - ஊரிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்து.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்.
 
முகவரி:-
 
அம்மன் கோவிலடி, மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி.

தொடர்புகளுக்கு:

(075) 940 0481

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/04/2024 01:56)