திருமதி. பாலச்சந்திரன் தங்கேஸ்வரி

பாலச்சந்திரன் தங்கேஸ்வரி

மறைவு: 24 ஏப்ரல் 2024

யாழ். புதுவளவு உடையாமணல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலச்சந்திரன் தங்கேஸ்வரி அவர்கள் 24-04-2024  புதன்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கவேலாயுதம் - இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராஜசேகரம்பிள்ளை - குணபூசணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலச்சந்திரனின் அன்பு மனைவியும்,

தனபதி, மதுவந்தி, பவாணி (லண்டன்), ராஜா (கண்ணன் - லண்டன்), பிரகாஷ் (பாபு - லண்டன்) ஆகியோரின் அன்பு தாயாரும்,

சுதாகரன் (லண்டன்), அருளானந்தராஜா, வசந்தகுமாரி, கௌசல்யா, அனுசியா, ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுஸ், சதுர்த்தியா, பாக்யா, காவ்யா, விவேகன், விகாசினி, திவ்யா, சரண், கார்த்தி, ஆகாஷ், அனன்யா, ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,

கம்சனாவின் அன்பு பூட்டியும்,

தேவசந்திரலிங்கம், மற்றும் காலம்சென்றவர்களான ஜெயச்சந்திரன், ருக்மணிதேவி, யோகச்சந்திரன், ஞானச்சந்திரலிங்கம், ஆகியோரின் சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/04/2024 00:00)